Thursday 31 July 2014

சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி



قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ) [آل عمران31


''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆனுக்கும் நபி ஸல் அவர்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

குர்ஆனில் சுமார் 25 இடங்களுக்கு மேலாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் என்பதுடன் சேர்த்து பெருமானாருக்கும் கட்டுப்படுங் கள் என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நாயகத்துக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகவே ஆகும்.ஏனெனில் குர்ஆனை மட்டும் இந்த உம்மத்துக்கு தந்திருந்தால் அதைமட்டுமே வைத்துக்கொண்டு இந்த சமுதாயம் ஒன்றும் செய்ய முடியாது.

அதை கற்றுக்கொடுப்பதற்கும்,வாழ்கையாக வடிவமைத்து கொடுப்பதற்கும் நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு தேவைப்பட் டார்கள்.

இதை அல்லாஹ் தன் வேதத்தில் தெளிவுபடுத்துகிறான்.

وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ) [النحل: 44],

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அதனால் தான் வேதங்களுடன் நபிமார்களும் மனித சமூகத்திற்கு தேவைப்பட்டனர்.

நபி ஸல் அவர்களின் சுன்னாவை ஒதுக்கிவைத்துவிட்டு திருக்குர்ஆ ன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள், மருத்துவம் பற்றிய நூலை படித்துவிட்டு அறுவைசிகிச்சை செய்யமுடியுமா?என்று யோசிக்க வேண்டும்.சட்ட நூட்களை படித்துவிட்டு கோர்ட்டில் வாதம் செய்ய முடியுமா? என்று யோசிக்க வேண்டும்.அப்படி செய்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

روى البيهقي أن عمران بن حصين -رضي الله عنه- ذكر الشفاعة, فقال رجل من القوم: يا أبا نُجيد: إنكم تحدثوننا بأحاديث لم نجد لها أصلاً في القرآن, فغضب عمران وقال للرجل: قرأت القرآن؟! قال: نعم. قال: فهل وجدت فيه صلاة العشاء أربعًا والعصر أربعًا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! أخذتموه عنا -أي الصحابة- وأخذناه عن رسول الله -صلى الله عليه وسلم-؟! أوجدتم فيه من كل أربعين شاة شاة -يعني في الزكاة- وفي كل كذا بعيرًا كذا، وفي كل كذا درهمًا كذا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! ألستم عنا أخذتموه، وأخذناه عن النبي -صلى الله عليه وسلم-؟! أوجدتم في القرآن: (وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ) [الحج: 29] أوجدتم فيه: فطوفوا سبعًا واركعوا ركعتين خلف المقام؟! أما سمعتم الله قال في كتابه: (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) [الحشر: 7]؟!

ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் ஷபாஅத்தை பற்றிய சில செய்திகளை கூறியபோது, கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர்,குர்ஆனில் இல்லாத சில செய்திகளை நீங்கள் கூறுகிறீர்கள் என்றார்.அப்போது கடும் கோபம் கொண்ட இம்ரான் ரலி அவர்கள் அந்த மனிதரிடம்,நீங்கள் குர்ஆனை படித்திருக்கிறீர்களா?என்று கேட்டார்கள்.ஆம் என்று பதில் கூறினார் அவர்.

குர்ஆனில் எங்காவது அஸர் தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் இஷா தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் வருகிறதா?என்று கேட்டபோது இல்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால் அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? ஸஹாபாக்களான எங்களின் மூலம் தான்.
நாங்கள் எங்களின் நாயகத்தின் மூலம் தெரிந்துகொண்டோம்.                 அவ்வாறு ஜகாத் விஷயத்தில் 40 ஆட்டுக்கு ஒரு ஆடு என்றும் ஒட்டகத்தில் இவ்வளவு என்றும் நீங்கள் குர்ஆன் மூலம் தெரியவில்லை காரணம் குர்ஆனில் இல்லை.அதை நீங்கள் எங்களின் மூலமும் நாங்கள் நபி ஸல் அவர்களின் மூலமும் தெரிந்து கொண்டோம்.
தவாப் செய்யுங்கள் என்று குர்ஆனில் உண்டு.ஆனால் அதில் 7 சுற்றுக்கள் உண்டு என்றும் தவாபிர்க்கு பின் 2 ரக்கஅத் தொழவேண்டுமென்றும் நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.
                                                               எனவே இந்த தூதரான நபி ஸல் அவர்கள் எதை சொன்னார்களோ அதை  எடுத்துநடக்கவேண்டும்,எதை தடுத்தாரோ அதைவிட்டும் விலகி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். 
                                
எனவே நாயகத்தை விட்டு குர்ஆனை தனித்து பார்க்க இயலாது.     அதனால் தான் அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் நாயகம் வாழ்வு குறித்து கேட்கப்பட்டபோது அவர்களின் குணம் குர்ஆன் என்றார்கள்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டும் வஹியல்ல, நாயகத்தின் சுன்னதுக்களும் தான். ஆனால் இரண்டுக்குமிடையில் ஒரு வித்தியாசம் உண்டு.

 குர்ஆன், வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தம்.சுன்னாவை பொருத்தவரையில் வார்த்தை நாயத்துக்கு சொந்தம்,கருத்து அல்லாஹ்வுக்கு சொந்தம்.அதை வஹ் ஙய்ர மத்லு என்று சொல்வார்கள்.

அதனால் தான் சுன்னத்தை விடுபவன் பாவியாக இருக்கலாம் அதை மறுப்பவன் காபிர் என்பது இமாம்களின் யோகோபித்த முடிவாகும்.

மஸ்ஜித் நபவியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரை எழுப்பி விடசொல்லி நபி ஸல் அவர்கள், ஹழ்ரத் அலி ரலி அவர்களுக்கு உத்தரவிட்டபோது,நன்மையான காரியங்களில் தாங்களே முந்திக்கொள்வீர்கள் ஆனால் இவர் விஷயத்தில் தாங்கள் என்னிடம் சொல்ல காரணம் என்ன வென்று அலி ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்டபோது.
அதற்கு பதிலளித்த நாயகம்,அலியே!நீர் எழுப்பிவிட்டு அதை அவர் மறுத்தால் ஒன்றுமில்லை.நான் எழுப்பி அவர் மறுத்தால் காபிராகிவிடுவார் என்று கூறினார்கள்.
நபிமார்களுக்குப்பின் இந்த உலகில் மிகச்சிறந்த மனிதரான ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول أبو بكر الصديق -رضي الله عنه- أفضل هذه الأمة بعد نبيها: لست تاركا شيئا كان رسول الله -صلى الله عليه وسلم- يعمل به إلا عملت به، وإني لأخشى إن تركت شيئا من أمره أن أزيغ.

நபி ஸல் அவர்கள் எதைச்செய்தாலும் அதை நான் விட்டதேயில்லை.அவர்களின் உத்தரவில் எதையேனும் நான் விட்டால் நான் வழிகெட்டுப்போகிவிடுவேன்.

சுன்னத்துக்கள் தான் இந்த உம்மத்தின் முகவரி.எந்த சமூகமும் அதன் தனித்துவத்தை இழந்தால் தன் கடந்த கால வரலாற்றை இழந்துவிடும். 

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சமூகங்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டவர்கள் நாம்.

நபி ஸல் அவர்களின் சுன்னத்தை தம் வாழ்வில் கடைபிடிக்கும் விஷயத்தில் ஸஹாபாக்களிடத்திலும்,தாபியீன்களிட்த்திளும் இருந்த பேனுதல் நமக்கு அழகிய முன்மாதிரியாகும்.

واستلم عمر بن الخطاب -رضي الله عنه- الحجر الأسود وقال: والله إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت النبي -صلى الله عليه وسلم- يقبلك ما قبلتك. رواه مسلم

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மூத்தமிட்டு  நீ ஒரு கல் என்றும் எந்த பயனையும்,இடையூரையும் உன்னால் தர முடியாது என்றும் நான் அறிவேன்.நபி ஸல் அவர்கள் உன்னை முத்தமிட நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை நான் முத்தமிட்டிருக்கமாட்டேன்.என்று கூறினார்கள்.


وقال علي بن أبي طالب: لو كان الدين بالرأي لكان باطن الخفين أحق بالمسح من ظاهرهما، وقد مسح رسول الله -صلى الله عليه وسلم- على ظاهر خفيه.

மார்க்கம் என்பது அறிவை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கு மானால் மோஸாவுக்கு மேல்பாகத்தில் மஸஹ் செய்வதை விட உள்பாகத்தில் மஸஹ் செய்வது தகுதியானது என்று சொல்லியிருப்பேன்.ஆனால் நபி ஸல் அவர்கள் மோஸாவின் மேல்பாகத்தில் தான் மசஹ் செய்தார்கள்.எனவே அதுவே சுன்னத்தாகும்.என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


بلغ من اتباع عبد الله ابن عمر سنة رسول الله عليه الصلاة والسلام انه إذا سافر من المدينة إلى مكة وقد كان في عهد رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر صغيرا اصغر من غيره ,وكان إذا سافر بعد ما كبر , بعد وفاة رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر يسأل الصحابة الكبار كان يقول من ايي مكان سارة ناقة النبي عليه الصلاة والسلام فيشيرون له إلى مواضع
يقولون نظن أن ناقته مشت من هنا أو من هنا , فكان ابن عمر يسير بناقته فوق هذا الطريق ويقول لعل خفا يقع على خف "لعل خف ناقتي يقع على خف ناقة رسول الله صل الله عليه وسلم " وكان ابن عمر في اثناء الطريق يسألهم اين كان النبي صل الله عليه وسلم يستريح , تحت أي شجرة ,فربما اشاروا له إلى بعض الشجر فيأتي ابن عمر وينزل ويستريح تحتها فعلا لفعل رسول الله عليه الصلاة والسلام

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதில் மிகவும் பேனுதல் உள்ளவர்கள்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பிறகு மதீனாவிலிருந்து மக்கா பயணம் செய்தபோது பெரிய ஸஹாபிகளிடம் நாயகத்தின் பயணம் குறித்து கேட்பார்கள்.
பெருமானாரின் ஒட்டகம் எங்கெல்லாம் நின்றதோ அங்கெல்லாம் தங்களின் ஒட்டகத்தை நிறுத்துவார்கள்.எந்த இடங்களிலெல்லாம் நாயகம் ஒய்வெடுத்தார்களோ அங்கு தாங்களும் ஓய்வெடுப்பார்கள்.
எந்த பாதை வழியாக நாயகத்தின் ஒட்டகம் சென்றதோ அந்த வழியாக செல்வார்கள்.
மக்கா வெற்றி பெற்றபோது கஃபாவின் கதவை திறந்து உள்ளே சென்ற நபி ஸல் அவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
அதைபார்த்த இப்னு உமர் ரலி அவர்கள் கஃபாவின் உள்ளே சென்று பிலால் ரலி அவர்களிடம் நாயகம் எங்கே தொழுதார்கள்?என்பதை கேட்டறிந்து தாங்களும் அந்த இடத்தில் இரண்டு ரக்கஅத் 
தொழுதார்கள்.

عند البخاري من حديث ام حبيبة رضي الله عنها قالت سمعت النبي صل الله عليه وسلم يقول [ من صلى اثنتي عشرةَ ركعة في يومٍ وليلةٍ ، بني له بهن بيتٌ في الجنةِ .] تعني السنن الرواتب وهما الركعتان قبل الفجر ,واربع قبل الظهر ,وركعتان بعدها ,وركعتان بعد المغرب ,وركعتان بعد العشاء , قالت ام حبيبة : فما تركتهن منذ سمعتُهن من رسولِ اللهِ صلى اللهُ عليهِ وسلَّمَ . وقال ابنُ عنبسةَ : فما تركتُهن منذ سمعتُهن من أمِّ حبيبةَ . وقال عمروُ بنُ أوسٍ : ما تركتُهن منذ سمعتُهن من عنبسةَ . وقال النعمانُ بنُ سالمٍ : ما تركتُهن منذ سمعتُهن من عمروِ بنِ أوسٍ .]
الراوي: أم حبيبة رملة بنت أبي سفيان المحدث: مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو
 الرقم: 728

எவர் ஒரு நாளில் 12 ரக்கஅத் தொழுவாரோ (அதாவது பஜ்ருக்கு முன் 2, ழுஹருக்குமுன் 4, ழுஹருக்கு பின் 2, மங்ரிபுக்கு பின் 2, இஷாவுக்கு பின் 2,)அவருக்கு  சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹபீபா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.இந்த ஹதீஸை நாயகத்திடக் கேட்ட்திலிருந்து அந்த 12 ரக்கஅத்தை விட்டதில்லை.

உம்மு ஹபீபா ரலி அவர்களிடம் இதை கேட்டதிலிருந்து தான் விட்டதில்லை என இப்னு அன்பஸா ராவி கூறுகிறார்.
இவரிடம் கேட்டு அறிவிக்கும் அம்ரும்,அம்ரிடம் கேட்டு அறிவிக்கும் நுஃமானும் இவ்வாரே கூறுகின்றனர்.

من يعش منكم بعدي فسيرى اختلافاً كثيراً، فعليكم بسنتي

எனவே குழப்பமான காலத்தில் என் சுன்னத்தை வலுவாக பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "إن من ورائكم زمان صبر، للمتمسك فيه أجر خمسين شهيداً منكم" الطبراني وصححه الألباني.

பின்னால் ஒரு காலம் வரும்,அதில் சுன்னத்தை பற்றி பிடிப்பவருக்கு 50 ஷஹீத்களின் நன்மை கிடைக்கும்.என்று நபி ஸல் அவர்கள் 
கூறினார்கள்.
قال عبد الله الديلمي: إن أول ذهاب الدين ترك السنة، يذهب الدين سُنةً سُنةً كما يذهب الحبل قوة قوة.

இந்த தீனின் அழிவு சுன்னதை விடுவதிலிருந்து ஆரம்பிக்கும் என அப்துல்லாஹ் தைலமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
பிறப்பு முதல் இறப்பு வரை மிகச்சிறந்த வழிகாட்டுதலை தரப்பட்ட இந்த உம்மத் தன் சுய முகவரியை இழந்துவிடாமல் இருக்க சுன்னத்துக்களை பின் பற்றி நடப்போமாக!

என் வழிமுறையை நேசிப்பவர் என்னை நேசிப்பவர்.
என்னை நேசிப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார். (நபி ஸல் அவர்கள்)





No comments:

Post a Comment